நிதிப் பிரச்சினையால் மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை கைது!

குருநாகல் பகுதியில் நிதிப் பிரச்சினை காரணமாக, தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில். ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் தந்தையால் அவரது மகன் ஆயுதமொன்றினால், தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிப் பிரச்சினை காரணமாக, தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக மாறியதையடுத்து இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், குருநாகலை மாஎலிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில், 45 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews