குளவி கொட்டுக்கு இலக்கான வயோதிப பெண்மணி யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் நேற்றையதினம் (12) காலை 6.30. மணிக்கு காரைநகர் – களபூமியில் உள்ள ஆலயத்திற்கு துப்பரவு வேலைக்காக சென்று, துப்பரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இந்நிலையில் அவர் வலந்தலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு,  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews