இரத்தினபுரி மாவட்டம் தொட்டிகலம மலைப்பகுதியில் தீ பரவல்

இரத்தினபுரி மாவட்டம் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குட்டபிட்டிய பகுதியில் உள்ள தொட்டிகலம மலைப்பகுதியில் திடீரென தீ பரவியுள்ளது.

பெல்மடுல்ல பொலிஸாருக்கு நேற்றிரவு கிடைத்த தகவலின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸார், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் சுமார் 07 ஏக்கர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews