மாத்தறையில் பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மாத்தறை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால்சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இன்று காலை அவர் தமது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் மாத்தறை – கெகுணுதுர பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரென தெரியவந்துள்ளது.

அவர் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் தெரியவரவில்லை.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார்; முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews