கல்வியங்காட்டில் பழ வியாபாரியை கடத்திய கும்பல் கோப்பாய் பொலிசாரால் கைது!

நேற்று காலை பட்டப்பகல் வேளையில் கல்வியங்காட்டு பகுதியில் பழ வியாபாரி ஒருவர் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு கடத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கடத்தல் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து இன்று அதிகாலை கடத்தப்பட்ட நபர் கிளிநொச்சி பகுதியில் மீட்கப்பட்டதோடு குறித்த கடத்தலுடன் தொடர்புடைய கும்பல் கோப்பாய் பொலி சாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

கனகாம்பிகை குளம், பரந்தன், கரடிப்போக்கு சந்தி பகுதியைச் சேர்ந்த 21,22 வயதினையுடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews