மன்னாரில், 3 கோடிக்கும் அதிக பெறுமதியான ஹொக்கைன் மீட்பு!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில், 1 கிலோ 12 கிராம் ஹொக்கையினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம், மன்னார் மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகரின் பணிபுரைக்கு அமைவாக, பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில், குறித்த நபர் ஹொக்கைனுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் தாழ்வுபாடு பகுதியை சேர்ந்த 34 வயதான நபர் எனவும், சந்தேக நபரிடம் மன்னார் குற்றபுலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சன்றுபொருள் மற்றும் சந்தேக நபரை ஆஜர்படுத்தவுள்ளனர்.

கைப்பறப்பட்ட கெக்கைனின் தற்போதைய சந்தை மதிப்பு 3 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகிறது,

Recommended For You

About the Author: Editor Elukainews