ஜஸ்வர் உமர் மீண்டும் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக தெரிவு!

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான ஜஸ்வர் உமர் மீண்டும் சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் நேற்று கொழும்பில் நடைபெற்றமு.
எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு பணியாற்ற அதிகாரிகளை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனங்களை சேர்ந்த அதிகாரிகளின் கண்காணிப்பில் இந்த தேர்தல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews