மோட்டார் சைக்கிள் – டிப்பர் வாகனம் மோதி, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

கலேவல, தலகிரியாகம பன்சாலை பகுதியில் நேற்று பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சென்ற மோட்டார் சைக்கிளுடன் எதிரே வந்த டிப்பர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பெண் பொலிஸ் அதிகாரி தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பருத்துத்துறை பொலிஸ் நிலையத்தில் சமூக பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் தம்புள்ளையைச் சேர்ந்த சாந்திமா ரணசிங்க 24 வயது உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து விடுமுறைக்காக வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews