கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் அடையாள பணிப்புறக்கணிப்பு!

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியின் நடவடிக்கைகளுக்கு எதிராக சுகாதார அமைச்சிடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலும் அதற்கான உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களினால் நேற்று நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews