யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை அதிகரிப்பு!

வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் இதுவரை 2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா இன்றையதினம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெள்ளப்பெருக்கு காரணமாக கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 974 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 215பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 259பேரும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 212 குடும்பங்களைச் சேர்ந்த 712பேரும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 783 குடும்பங்களைச் சேர்ந்த 2683 பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 117 குடும்பங்களைச் சேர்ந்த 439பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 144பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 260பேரும், யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேரும், வேலணை பிரதேச செயலர் பிரிவில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 940 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews