ஐக்கிய மக்கள் சக்தியில் ஷான் விஜயலால் டி சில்வா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்த ஷான் விஜயலால் டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி இன்று (01) ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பலாங்கொடை தொகுதியின் பிரதம அமைப்பாளராக நீண்டகாலம் பணியாற்றிய ஷான் விஜயலால் டி சில்வா, தென் மாகாண அமைச்சராக ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் பதவி வகித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த அவர், இன்றைய தினம் (01) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

மேலும், அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தி அம்பலாங்கொடவின் பிரதம அமைப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor Elukainews