யாழில் ஏற்பட்டுள்ள பதட்டம்

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இருக்கும் உணவகம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞன் மீது, நேற்றைய தினம் வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் துன்னாலை வடக்கை சேர்ந்த 21 வயது இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்த வேளை,
உணவகத்தினுள் அத்துமீறி வாள்களுடன் வந்த கும்பல் இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews