கொட்டித் தீர்க்கும் கனமழை-அவதியுறும் மக்கள்

நேற்று இரவிலிருந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளது.இதனால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை,வட்டவன், சேனையூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள 46 குடும்பங்களைச் சேர்ந்த 137 நபர்கள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை வெருகலம்பதி மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியதோடு வயல் வெளிகளும் நீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்து 2 அடியில் வெள்ளநீர் செல்வதால் இவ் வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews