மலையகத்தில் பரபரப்பு-பிரிந்த இரண்டு உயிர்கள்

கொஸ்லந்த, வேலன்விட வீடொன்றின் தோட்டத்தில் நேற்று பிற்பகல் வயோதிப தம்பதியினரின் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் வயோதிபப் பெண்ணின் சடலம் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டது.

மேலும், வீட்டிற்கு மின்சாரம் வழங்கும் மின்சார வயரின் உடைந்த இரண்டு பாகங்களைப் பிடித்துக் கொண்டு உயிரிழந்துள்ளதாகவும், சடலம் மிகவும் அழுகியதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மற்றைய முதியவரின் சடலம் வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.

கொஸ்லந்த வேலன்விட்ட அகர சியாவில் வசித்து வந்த ஆர்.டி.விமலாவதி என்ற 63 வயதுடையவர் மற்றும் உதநிலமேகெதர குணதாச என்ற 70 வயதுடைய ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews