பீதியில் வவுனியா மக்கள்-ஒருவர் உயிரிழப்பு

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அனுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.

வவுனியாவில் ஒரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews