கோடாரியால் தாக்கி நபர் ஒருவர் கொலை

தனது மனைவியின் 63 வயதுடைய மூத்த சகோதரனை கோடரியால் தலையில் தாக்கி கொன்ற நபர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

ஹிடோகம பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய திருமணமான ஒருவரே பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

ஹிடோகம பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான பியதாசகே ஜயசேன என்ற திருமணமான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்

உயிரிழந்தவரும் சந்தேக நபரும் ஒரே வீட்டில் வசிக்கும் இருவர் எனவும்,

சந்தேகநபர் உயிரிழந்தவரின் சகோதரியை திருமணம் செய்து கொண்டு மத்திய கிழக்கில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சந்தேக நபரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதால்,

நேற்று முன்தினம் (02) இரவு வீட்டுக்குள் இருந்த சந்தேக நபர் கோடரியால் உயிரிழந்தவரின் தலையில் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews