உடல் சிதறி பலியான 103 பேர்

ஈரானில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 141 பேர் காயமடைந்துள்ளனர்.

கெர்மான்பகுதியில் உள்ள ஈரானின் முன்னாள் தளபதி Qasem Soleimani -இன் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன.

Qasem Soleimani -இன் நினைவு நாளை அனுசரிக்க ஏராளமானோர் கூடியிருந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் இராணுவ ஜெனரல் Qasem Soleimani-க்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (3) நடைபெற்றது.

ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே 820 கிலோமீட்டர் தொலைவில் கெர்மானில் உள்ள அவரது கல்லறைக்கு அருகில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews