கடலாமை இறைச்சியுடன் நாவற்குழியில் சிக்கிய நபர்

சட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த 54 வயதுடைய நபர் ஒருவர் நாவற்குழி பகுதியில் வைத்து நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் எடையுடைய கடலாமை இறைச்சி மீட்கப்பட்டது.
சாவகச்சேரி பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews