கடலுக்கு சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்

கடற்றொழிலுக்கு சென்ற நபரொருவர் கடலில் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று யாழில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அமலசூரி அன்ரனியூட் என்ற 5 பெண்பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் உட்பட மூவர் நேற்று முன்தினம்(03) இரவு 10.30 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது அமலசூரி அன்ரனியூட் திடீரென மயக்கமடைந்துள்ளார்.

அவருடன் சென்றவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அனுமதித்துள்ள போதும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று(04) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews