கடற்படையால் கட்டைக்காடு காட்டுப்பகுதி திடீர் சுற்றிவளைப்பு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் அண்மைக்காலமாக போதை பொருள் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் கட்டைக்காடு காட்டுப்பகுதிக்குள் போதை பொருளை தாட்டு வைத்திருப்பதாக கடற்படையினருக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளது.

இதன்பிரகாரம் இன்று மாலை 05.00 வெற்றிலைக்கேணி கடற்படையினர் குறித்த இடத்தை திடீர் சுற்றிவளைப்பு செய்து தேடி வருகின்றனர்.

காட்டுப் பகுதிக்குள் பெருமளவான கஞ்சா பொதிகளை புதைத்துவைத்துள்ள கடத்தல்காரர்கள் பாதுகாப்பு படையினரின் சோதனைகளால் அதை விற்பனை செய்ய முடியாது திண்டாடி வந்த நிலையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரமாக 15 இற்கும் மேற்பட்ட கடற்படையினர் புலனாய்வாளர்களுடன் தேடுதல் நடத்திவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews