வடமராட்சி கிழக்கில் பரபரப்பு-கரையொதுங்கிய படகு

வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.

படகில் காணப்படும் இலக்கம் அழிக்கப்பட்டு இருப்பதால் போதை பொருள் கடத்தல்காரர்கள் இதனை பாவித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த படகு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காடு காட்டுப் பகுதியில் 55Kg கேரள கஞ்சாவை கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews