விமானப்படையினரால் மயிலிட்டி கலைமகள் வித்தியாசாலை புனரமைப்பு பணி ஆரம்பம்!

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அவர்களின் பங்கு பற்றுதலில் இன்றைய தினம் மயிலிட்டி கலைமகள் வித்தியாசாலையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன

இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ அவர்களின் வழிகாட்டுதலில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன

அந்தவகையில், எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்காக எரிவாயு விசையாழி விமான இயந்திரங்களை வழங்கவுள்ளது

பல்கலைக்கழக மாணவர்களுக்கான கற்றல் உதவிகளை பெற்றுக்கொடுக்க உள்ளதோடு. அயாழ் மாவட்டத்திலுள்ள 73 பாடசாலைகளை புனரமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும், 73,000 தமிழ் மற்றும் ஆங்கில மொழி புத்தகங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப்படையின் படைத்தளபதி, தெரிவித்தார்.

இதேவேளை, மருத்துவ முகாம், பற்சிகிச்சை முகாம், கண் சிகிச்சை முகாம், இலவச கண்ணாடிகளை வழங்குதல், இரத்ததான முகாம் நடத்துதல், 73 ஆயிரம் மரக்கன்றுகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது

அத்துடன், சைக்கிள் ஓட்டப்போட்டி, கல்விக் கண்காட்சி, மாலை நேர இசைநிகழ்ச்சி என்பவற்றை நடாத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு பாடசாலைகளின் புனரமைப்பின் போது கழிவறை மற்றும் குடிநீர் வசதி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதோடு

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தொழிற்துறைசார் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி கலைமகள் வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற பாடசாலை புனரமைப்பு பணி ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews