முல்லைத்தீவில் பாரிய தீ விபத்து

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியில் இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை திடீரென தீ ஏற்பட்டதை அவதானித்த அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றுகூடி குறித்த வர்த்தக நிலையத்தில் பரவிய தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இருப்பினும் குறித்த தீப்பரவல் காரணமாக வர்த்தக நிலையத்தில் இருந்த பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews