தமிழர் பகுதியில் நேர்ந்த கோர விபத்து

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி வரோதயநகர் பகுதியில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பௌத்த பிக்கு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

திருகோணமலையில் இருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி (11) மாலை 5.30 மணியளவில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

பொலிஸார் வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த முச்சக்கர வண்டி தடுமாற்றத்தில் நிறுத்த முற்பட்டபோது வீதியை விட்டி விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வருகின்றது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் விரைந்து வந்து சாரதியை சோதனையிட்டதையும் காணக் கூடியதாக இருந்தது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்து பௌத்த பிக்கு இருவரில் ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிய வருகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews