யாழில் கசிப்புடன் பெண் உட்பட நால்வர் கைது

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 19 லீட்டர் கசிப்புடன் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸாருடன் இணைந்து, கோப்பாய் மத்தி சூசையப்பர் கோவில் பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 19 லீட்டர் கசிப்பும் ஒரு பெண்ணும் 3 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews