யுத்தத்தில் காலினை இழந்த குடும்பப் பெண் மீது கொடூர தாக்குதல்!

வீடொன்றுக்குள் புகுந்து குடும்பப் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா மருத்துவம் னைக்கு மேலதிக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட் டுள்ளார்.
இந்தச் சம்பவம் முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள் ளது. கணவன் வேலைக்குச் சென்ற நிலையில் தனித்திருந்த குறித்த பெண்மீதே இனந்தெரியா தோரால் இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பெண் இறுதிப் போரில் காலொன்றை இழந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews