*ஒற்றை நூலில் வல்வை வாண் வெளியில் நடந்த அதிசயம்*

வல்வெட்டித்துறை விசித்திர விநோத பட்டப் போட்டி திருவிழாவிலே நேற்றைய தினம் நூற்றுக்கணக்கான பட்டங்கள்‌ வானிலே பறக்க விடப்பட்டன அந்த வகையில்  95 young stars அணியின்‌ தலைவர் விநோதனின் கற்பனைத்திறனிலும்‌கைவண்ணத்திலும் உருவான விமானம் தாங்கி போர்க்கப்பல் பட்டம் நேற்றுபோட்டிக்காக பறக்க விடப்பட்டது.

பட்டம் வான் நோக்கி உயரத் தொடங்கிய நிமிடத்தில் இருந்து அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் பார்வையையும் ஒரு ஐந்து நிமிடங்கள் அந்த வான் வெளியினையே கண் சிமிட்டாமல் பார்க்க வைத்து மிரட்டி இருந்தது. ஆம் மக்கள் வெள்ளம் எதிர்பார்த்து இருந்ததை விட இரு மடங்கு ஆச்சரியத்தை நிகழ்த்தி விட்டு நடுவர்களின்‌ தீர்ப்பினால் இன்று முதல் நிலை பட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது .

 

இவை அனைத்தும் ஒற்றை நூலிலே நிகழ்தப்பட்டுள்ளது என்பதே ஆச்சரியமாக உள்ளது .வெற்றியீட்டிய விநோதனுக்கும் இரவு பகல் பாராமல் கூடவே முழு நேரமும் இருந்து ஒத்துழைப்புக்களை வழங்கிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews