அநுரகுமார ஜனாதிபதியானதும் பெண் ஒருவருக்கே பிரதமர் பதவி!

தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானதன் பின்னர் பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பதால், பெண் ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதே எமது கட்சியின் நோக்கமாகும்.

தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதால், எமது அரசாங்கமும் அந்த வேலைத்திட்டத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டும்.

நிலைமைகளை இலகுபடுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் மீளாய்வு நடத்தப்படும்.

மேலும், எமது வேலைத்திட்டத்திற்கு துரோகமிழைக்கும் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என விஜித ஹேரத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews