மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற சூரிய பொங்கல் நிகழ்வும், உழவர் கௌரவிப்பும்

மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சூரிய பொங்கல் நிகழ்வும்,உழவர் கௌரவிப்பும் இன்று புதன்கிழமை(17) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது சூரிய பொங்கல் பொங்கும் நிகழ்வு இடம்பெற்றது.இதனைத்தொடர்ந்து அரசாங்க அதிபர் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றது.

நடனம்,சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை இடம் பெற்றதோடு,மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட உழவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்க பட்டனர்.

குறித்த நிகழ்வில் மாவட்டச் செயலக அலுவலர்கள்,பிரதேச செயலாளர்கள்,மேலதிக மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews