கட்டைக்காட்டில் கடற்படை திடீர் சுற்றிவளைப்பு-தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் இன்று காலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

கடற்பகுதியை அண்டிய பிரதேசத்தை திடீரென சுற்றிவளைத்த கடற்படை பல மீனவர்களையும்,அவர்களது உடமைகளையும் சோதனை செய்தனர்.

இதன்போது தடைசெய்யப்பட்ட தங்கூசிவலைகளை வைத்திருந்த மீனவர்களிடம் இருந்து குறித்த வலைகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வெற்றிலைக்கேணி கடற்படையினர் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போதே தங்கூசிவலைகள் கைப்பற்றப்பட்டதோடு கைப்பற்றப்பட்ட வலைகளை அழிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews