கோர விபத்து: இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலி!

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சரும் இன்னும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews