மற்றுமொரு விகாரையில் துப்பாக்கி சூடு…!

குருநாகல், தொடம்கஸ்லந்த – உடத்தபொல புராதன விகாரையில் கல்னாவே பன்னகிட்டி தேரரை இலக்கு வைத்து நேற்றிரவு(24) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விகாரை பீடாதிபதி கல்னாவே பன்னகிட்டி தேரரின் வரவேற்பறையில் உள்ள ஜன்னல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அவர் அப்போது விடுதியில் வேறு இடத்தில் உறங்கியதால் தேரருக்கு எந்த பாதிப்பும் இல்லைெயன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் விகாரையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நேற்றையதினமும் இது போன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews