செல்பியால் ரஷ்ய யுவதிக்கு நேர்ந்த விபத்து

ரயிலில் பயணித்த ரஷ்ய பெண்ணொருவர் இன்று செல்ஃபி எடுக்க முற்பட்டபோது, தவறி வீழ்ந்து பலத்த காயமடைந்து தெமோதர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஷ்ய பிரஜையான கிறிஸ்டினா அலக்வானா என்ற 25 வயதுடைய யுவதியே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒரு நாள் பயணமாக ஹிக்கடுவையில் இருந்து எல்ல நோக்கி சென்றிருந்த போதே அவர் இந்த விபத்தை சந்தித்துள்ளார்.

அவரது கடவுச்சீட்டுகள் உள்ளிட்டவை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews