காலமானார் நல்லூர் மாப்பாண முதலியாரின் தாயார்..!

நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களது துணைவியாரும், தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன் குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களது தாயாருமாகிய அம்மா சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள் இறையடிசேர்ந்தார்.

அன்னாரது இறுதிகிரிகைகள் யாழ்ப்பாணம் நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் 30.01.2024 செவ்வாய்க்கிழமை இடம்பெற்று தகனகிரிகைகளுக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

Recommended For You

About the Author: Editor Elukainews