குளவி கொட்டுக்கு இலக்கான 6 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சை.!

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்டத்தில் நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்கான 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஆறு பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலை செடிகளின் கீழ் கட்டப்பட்ட இருந்த குளவி கூடு கலைந்ததால் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் தோட்ட வாகனங்கள் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வரப் பட்ட நிலையில் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews