செங்கலடி வந்தாறுமூலை மேற்கு செட்டியார் வீதிக்கான இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீடு

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் ஆளும் தரப்பு மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து பல அபிவிருத்தி பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நிலையில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி வந்தாறுமூலை மேற்கு கிராம சேவையாளர் பிரிவிலும் 2.3km நீளமான செட்டியார் வீதிக்கான நிதியினையும் ஒதுக்கீடு செய்து முதலாம் கட்டபணிகளை முன்னெடுத்திருந்த நிலையில் தற்போது அதற்க்கான இரண்டாம் கட்ட நிதியினையும் தனது கிராமிய வீதிகள்அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்தியுள்ளார்.

இவ் இரண்டாம் கட்ட பணிகளை இன்றைய தினம் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சரும் அப்பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழு தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் ஆரம்பித்து வைத்திருந்தார்.

இதன் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் நவரத்தினம் திருநாவுக்கரசு, கிராமிய குழு தலைவர் பிரதீபன், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews