முடிந்தால் பகிருங்கள்- யாருக்காவது பயன் பெறட்டும்

தற்போது இலங்கை நில அளவைத்திணைக்களத்தினால் 39 வெற்றிடங்களை நிரப்புவதற்காக வரைபட தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஆனால் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்களில் போதிய விண்ணப்பம் கிடைக்கப்பெறவில்லை.

உதாரணமாக கிளிநொச்சியில் இதுவரை 2 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. அதே போல தான் மற்ற மற்ற மாவட்டங்களிலும் நிலைமை காணப்படுகின்றன.

போட்டி போடுமளவு கூட விண்ணப்பங்கள் இல்லை. தமிழ் மொழிமூல விண்ணப்பதாரிகள் ஓரளவேனும் தெரிவாக வேண்டுமாயின் ஓரளவேனும் போட்டிபோடுமளவாவது விண்ணப்பங்கள் செல்ல வேண்டுமல்லவா ?

இது தொடர்பாக போதியளவு விண்ணப்பங்கள் கிடைக்காமைக்கு முக்கிய காரணம் இது தொடர்பாக தகவல்கள் உரியவர்களுக்கு சென்றடையாமையே ஆகும்.

இந்த பணிக்கு A/L இல் கணித பிரிவில் 3 பாட சித்தியும் O/L இல் தமிழ், கணிதம், விஞ்ஞானம் உட்பட 4C,2S இருக்கும் 30 வயதுக்குட்பட்ட யாரும் விண்ணப்பிக்கலாம்.

ஆகவே தயவு செய்து கணித பிரிவில் 3 பாட சித்தி உள்ள உங்கள் நண்பர்கள், தம்பி தங்கைகளுக்கும் அவசரம் தெரியப்படுத்திக்கொள்ளுங்கள்.

நாளை ( 29.01.2024 ) விண்ணப்ப முடிவு திகதியாகும்.

Note :-நாளையே(29/01/2024) விண்ணப்ப படிவத்தை நிரப்பி அவரவர் மாவட்டத்திலுள்ள மாவட்ட நில அளவை அலுவலத்தில் பணத்தினை செலுத்தி நாளையே பதிவுத்தபாலில் அனுப்புதல் வேண்டும்.

முடிந்தவரை பகிருங்கள் யாராவது பயன்பெறட்டும்.
நல்லதொரு வாய்ப்பு அநியாயமாய் பலர் தவறவிட போறாங்க.🤦‍♂️🤦‍♂️

நாளை மதியம் 12 மணிவரை எந்த நேரமும் தகவல் பெற முடியும்.

நீங்கள் பகிரும் பகிர்வு யாரோ ஒருவருக்கு நன்மை கிடைக்குமெனில் பகிர்வதில் தவறில்லையே.

யாழ்ப்பாணம் 🤦‍♂️
கிளிநொச்சி 🤦‍♂️
முல்லைத் தீவு 🤦‍♂️
மன்னார் 🤦‍♂️
வவுனியா 🤦‍♂️
அம்பாறை 🤦‍♂️
மட்டக்களப்பு 🤦‍♂️
திருகோணமலை 🤦‍♂️

Recommended For You

About the Author: Editor Elukainews