மின் இணைப்பு பெறவுள்ளோருக்கு மகிழ்ச்சி செய்தி..!

புதிய மின் இணைப்புகளுக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்த முடியாத விண்ணப்பதாரர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு மின்சார சபையிடம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

மின்சார சபையின் எஞ்சிய சேவைகளுக்கு தவணை முறையில் பணம் செலுத்துவதற்கு வசதி செய்து கொடுக்குமாறு பணிப்புரை விடுப்பதாகவும், இவ்வசதிகளை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வருட மின் உற்பத்தித் திட்டம், அட்டவணை, சேவைச் செலவுகள், மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள், காலநிலை முன்னறிவிப்புக்கள் தொடர்பில் மின்சார சபையின் செயற்பாட்டுப் பிரிவுடன் தாம் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews