ஆதிமயிலிட்டி அருள்மிகு காசிப்பூதராயர் ஆலய கும்பாவிஷேகதின மணவாளக்கோல உற்சவம்.

ஆதிமயிலிட்டி.அருள்மிகு காசிப்பூதராயர் ஆலய மணவாளக் கோல உற்சவம் நேற்று (31) இடம்பெற்றது.

காலை 8.30 மணிக்கு சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மூலமூர்த்திக்கு 1008 சங்காபிஷேகமும், பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேகம் கிரியைகள் இடம்பெற்றது.

இதேவேளை மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் இடம்பெற்றது. காலை சங்காபிஷேகம் நடைபெற்ற நிலையில் மாலை .
விசேட பூசைகள் நடைபெற்றதையடுத்து பூதராயர் பெருமான் வீதியுலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

குறிப்பாக 1990 ம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் இவ் ஆலய விக்கிரகங்கள் சுன்னாகம் தெற்கு சிவபூதராயர் கோயிலில் வைத்து மக்களால் வழிபாடாற்றி .வந்த .நிலையில் மீள் குடியேற்றத்தின் பின் 33 வருங்கள் கடந்த நிலையில் மீண்டும் ஆதிமயிலிட்டியூரில் பிரதிஸ்டை. செய்யப்பட்டது.

யுத்த காலத்தில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இக் கோயிலானது புனருத்தாரணம் செய்யப்பட்டு 2022 ம் ஆண்டு மகா கும்பாவிசேகம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews