ஹரிஹரனின் இசை நிகழ்வில் தடைகளை உடைத்து கொண்டு பாய்ந்து சென்ற இரசிகர்கள்

ஹரிஹரனின் இசை நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் கலந்துகொண்டனர்.
ஆரம்பத்தில் இலவசம் என அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது பின்னர் கட்டணம் அறவிடப்பட்டும் (ரிக்கெட்) இலவசமாகவும் நடைபெற்றது.
இந்நிலையில் இலவசமாக பார்வையிட்ட இரசிகர்கள் தடைகளை உடைத்துக்கொண்டு பாய்ந்து சென்றதால் பொலிஸார் நிலைகுலைந்து நின்றனர்.
இந்நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் இசை நிகழ்ச்சின் இடையிடையே ஏற்பட்ட குழப்பங்களால் இசை நிகழ்ச்சி தடைப்பட்டது. முறையான திட்டமிடல் இன்மையே இதற்கான காரணமாக அமைந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews