தொடரும் யுக்திய வேட்டை-பலர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் ‘யுக்திய’ நடவடிக்கைகளில் 663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 116 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 175 கிராம் 191 மில்லி கிராம் ஹெராயின், பனி 171 கிராம் 197 மி.கி, கஞ்சா 515 கிராம் 538 மி.கி, 807 கஞ்சா செடிகள், மாவா 77 கிராம் 200 மி.கி, 296 மாத்திரைகள், மதன மோதக 85 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடுப்பு உத்தரவுகளின் அடிப்படையில் 02 சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் 02 போதைக்கு அடிமையானவர்களும் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப்பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 116 சந்தேக நபர்களில் 14 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 95 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.

கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்ட 03 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வரும் 4 சந்தேக நபர்களும் நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews