தற்காலத்தில் இந்த தாய்மை குணம் வேறு எவருக்கு வரும்…

தெல்லிப்பழையில் வசிக்கும் இந்த கணவன் மனைவி இருவருமே விழிப்புலனற்ற மிகவும் வறுமையில் வாழும் குடும்பமாகும்.

ஒரு குழந்தைக்கு தாய் தந்தையான இவர்கள் தமது எதிர்காலம் குறித்து மிகுந்த மன வேதனையுடன் வசித்து வந்தார்கள்.

இந்த நிலையில் இன்று குரும்பசிட்டியில் ஜெயதேவி கருமாரி அம்மா ஆனந்த நிலைய வீட்டுத் திட்டத்தில் மிகவும் அழகிய முறையில் சகல வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில்,

ஒரு வீட்டினை இந்த குடும்பத்திற்கு இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

செஞ்சொற்செல்வரின் நல்ல ஆசிகளுடன் இந்த விழிப்புலனற்ற குடும்பத்திற்கு புதிய வீடு கையளிக்கப்பட்டுள்ளது.

களத்தில் எவ்வித கடமையும் செய்யாமல் பிறரை தூற்றுவதையே தமது கடமையாக கொண்டு எவ்வித பலனற்று வாழாமல்,

ஓவ்வொரு அப்பாவி உயிர்களுக்கும் ஆறுதலாக வாழும் இது போன்ற தாய்மை குணத்தை உண்மையில் சிரம்தாழ்ந்தி பாராட்ட வேண்டும்.

Recommended For You

About the Author: Editor Elukainews