வாளுடன் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கைது!

தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி வாளை எடுத்துச் சென்ற தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கதிர்காமம் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நேற்று (07) மாலை லுணுகம்வெஹெர பொலிஸ் பிரிவில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கெப் வாகனத்தில் குறித்த தங்க வாள் கடத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது..

வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews