புனித பிலிப்பு நேரியார் ஆலயத்திலும் பெரிய வியாழன் அனுஷ்டிப்பு

குருத்துவத்தை ஏற்படுத்தி தனது உடலை உணவாகவும்,தனது குருதியைப்பானமாகவும் ஈர்ந்தருளிய பெரியவியாழன் புனிதத்திருப்பலியானது செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்பணி டியூக்வின்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் 28.03.2024 மிகவும் பயபக்தியோடு இடம்பெற்றது.

இப்புனித திருப்பலியை திருவுளப்பணியாளர்சபையின் வடமாகாணத்தலைவர் அருட்பணி மரியதாஸ் அடிகளார் அவர்கள் நிறைவேற்றியிருந்தார்.

அதன்பின்னர் மறையாசிரியர்கள்மற்றும் மறைக்கல்வி மாணவர்கள்,மரியாயின்சேனையினர்,இளையோர் யுவதிகள்,மாதாகூட்டத்தினர்,பாடகர்குழாமினர்,பொதுவழிபாடு என்ற ஒழுங்குமுறையில் திருவிழிப்பு ஆராதனைகள் இடம்பெற்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews