தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கார்த்திகைப் பூ விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி தொடர்பில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்ககளை தெல்லிப்பளை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கான விசாரணைக்கு தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நாளை 05.04.2024 பிற்பகல் 2.30 மணிக்கு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழப்பான அலுவலகத்தில்  ஆஜராகி விளக்கமளிக்குமாறு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழப்பான அலுவலகத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது
த . கனகராஜ்
பிராந்திய இணைப்பாளர்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
யாழ்ப்பாணம்

Recommended For You

About the Author: Editor Elukainews