பூநகரி வாடியடி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்

கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் பூநகரி வாடியடிச் சத்தியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் மோதியுள்ளது.
விபத்தில் 52 மற்றும் 63 வயதுடைய இருவர் படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டியில் ஏற்றப்பட்டு பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews