மன்னாரில் நீண்ட நாட்களின் பின்னர் இன்றைய தினம் கடுமையான மழை வீழ்ச்சி

மன்னாரில் நீண்ட நாட்களின் பின்னர் இன்றைய தினம் கடுமையான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நிலவி வந்த அதி உஷ்ணமான காலநிலை காரணமாக அதிகளவான வெப்பம் மற்றும் வறட்சி மன்னார் மாவட்டத்தில் நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் கடும் மழை பெய்துள்ளது.

குறுகிய நேர மழை பெய்த போதிலும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை வடமாகாணத்தின் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக  வெப்பத்துடன் கூடிய வானிலை  நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews