சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா நேற்று(27) காலை 9:00 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக பஞ்ச புராணம் ஓதுதலுடன், ஆரம்பமான வரவேற்பு நடனம், வரவேற்பு உரை, பட்டிமன்றம், நடனம், பண் இசைக் கச்சேரி, மயிலாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், உட்பல பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், சந்நிதியான் ஆச்சிரமத்தோடு தொடர்ந்து சேவையாற்றிய பலர் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சந்நியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், நலன்விரும்பிகள், என பலரும் கலந்துக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews