போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய மாணவன்

தம்புத்தேகம பேருந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் 6 போலியான 500 ரூபா நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

நொச்சியாகம உடுநுவர கொலனியைச் சேர்ந்த (17) வயதுடைய மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று (25) பிற்பகல் தம்புத்தேகம பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கியிருந்த வேளை, பேருந்து நிலையத்தில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அவரிடம் 6 போலி 500 ரூபா நாணயத்தாள்களை கண்டுள்ளார்.

சந்தேகநபரின் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அவரது வீட்டை சோதனையிட்ட போது வீட்டில் இருந்து ஏராளமான போலி பணம் அச்சடிக்கும் கருவிகளை கைப்பற்றியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews