பதுளையில் கோர விபத்து நால்வர் பலி

பதுளை – சொரணதொட்ட பகுதியில் இன்று ஏற்பட்ட பாரவூர்தி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே, கவிழ்ந்ததில் விபத்து நேர்ந்துள்ளது.

அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த மூவர்  பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews